Also Watch
Read this
By: Manigandan Raja

திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது :
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஒரகடம் பகுதியில் தனியார் சிமெண்ட் தூண் மற்றும் சிமெண்ட் பலகை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிற்சாலையில் இருந்து சிமெண்ட் தூண்களை ஏற்றிக்கொண்டு அனுபுரம் பகுதிக்கு செல்வதற்காக அதிக பாரம் ஏற்றிச் சென்றதால்.
டாடா ஏசி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முள்ளி கொளத்தூர் பகுதியில் சிமெண்ட் தூண் ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

அருகில் இருந்தவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்துக்குள்ளான
வாகனத்தில் பயணித்த வட மாநில இளைஞர்கள் நான்கு பேரில்.
ஜோஹிந்திரா வயது 34 என்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் படுகாயம் அடைந்த மூன்று பேரை அவசர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved