Also Watch
Read this
By: Manigandan Raja

பேராயத்தின் புதிய தேர்தல் :
கோவை மறை மாவட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டமும் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக கோவை மறை மாவட்டத்தை பிரித்து கடந்த 2025 ஆகஸ்ட் 16 ஈரோடு சேலம் டயாசிஸ் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஈரோடு சேலம் பேராயர் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்று இருந்த நிலையில் முதல் பேராயராக ஜேக்கப் லிவிங்ஸ்டன் பதவி ஏற்றார்.
புதிய பேராயராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே ஈரோட்டில் நடந்த ஒரு துயரமான விபத்தில் பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் காலமானார்.

இந்நிலையில் முதல் பேராயரின் துயரமான மரணத்தைத் தொடர்ந்து புதிய பேராயரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு பேரவை கூட்டம் நடத்தப்பட்டு அதில் 7 ஆயர்கள் பேராயர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
அதன்படி ஈரோடு சேலம் மறை மாவட்டம் உருவான சில மாதங்களிலேயே புதிய பேராயர் தேர்ந்தெடுப்பதற்கான அவசர தேர்தல் ஈரோட்டில் இன்று நடைபெறுகின்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved