Also Watch
Read this
By: Manigandan Raja

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரௌபதியம்மன் திருக்கோவிலில் 138-வது ஆண்டு அக்னி வசந்த பெருவிழா வெகு விமர்சையாக திரளான ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாபாரதப் 18-ம் போரின் அதர்மத்தின் அடையாளமான துரியோதனனை பீமன் கதாயுதத்தால் அடித்துக் கொல்லும் தத்ரூபமான முக்கிய படுகளம் நிகழ்வை காண வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
மேலும் மகாபாரத இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த பாரம்பரிய நிகழ்வில், துரியோதனன் படுகளம் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டன. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், உயரமான இடங்களில் இருந்து கழுகுப் பார்வையில் இந்த நிகழ்வைக் கண்டு ரசித்தனர் விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று
பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு த்ரௌபதியம்மனை மனமுருகி வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved