Also Watch
Read this
By: Manigandan Raja

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க வேண்டிய இடத்தில் 10 லட்சம் பழைய சாக்குகள் குடோனில் போட்டு வைத்துள்ளது நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேற்றைய தினம் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவீன அரிசி ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் உள்ள சாக்குகளை பார்வையிட தங்களை அனுமதிக்குமாறு ஆலை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆனால் ஆலையின் கதவை பூட்டி விவசாயிகளை உள்ளே அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கதவு மீது ஏறி உள்ள குதிக்க முயன்றதால் சலசலப்பு உருவாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.