வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் தங்களுடைய அறிவுத்திறன் மூலமாக கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியது மட்டும் அல்லாமல் அதன் செயல்முறை விளக்கத்தையும் எடுத்துக் கூறி அசத்தினர்.அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவ, மாணவிகள்ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது இதில் 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களுடைய அறிவுத்திறன் மூலமாக கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை அறிவியல் கண்காட்சியில் செய்முறை விளக்கத்தை கூறி கண்காட்சியில் பங்கேற்று அசத்தினார்கள்.அனைவரையும் கவர்ந்த அறிவியல் படைப்புகள்மேலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, அமில மழை ஏற்படுத்துவதற்கான காரணங்கள், பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் ஸ்டிக் , வாழைப்பழம், எலுமிச்சை பழத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை, இதய குறைபாடுகள், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண்டு களித்தனர். Related Link மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்