Also Watch
Read this
மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றியும், கருஞ்சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற்றது. மசோதா நகலை எரித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். கருப்புக்கொடி ஏற்றியும், கருஞ்சட்டை அணிந்தும், மசோதா நகலை எரித்தும் முதலமைச்சர் முழக்கமிட்டார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கும் என கூறி, மத்திய பாஜக அரசின் மோசடியான மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம் என மு.க.ஸ்டாலின் முழக்கம் எழுப்பினார். நாமக்கல், நல்லிப்பாளையத்தில் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved