Also Watch
Read this
By: Manigandan Raja

கார் மோதி விபத்து :
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த H.ஈச்சம்பாடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் திரும்பும் போது நேராக மோதியதில் சாலையோரம் பூக்கடையில்
நுழைந்ததால் பூக்கடை நடத்த வந்த வேப்பநத்தம் ஊரைச் சார்ந்த கலைச்செல்வி பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மற்றும் பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது காயம் ஏற்பட்ட பெண்களை அருகில் இருந்த மக்கள் மீட்டு உடனடியாக அரூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஈச்சம்பாடியில் திடீரென இரண்டு கார்கள் மோதியதால் அருகில் இருந்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈச்சம்பாடி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போதிய வாகன விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் சாலையின் நடுவே வாகனங்கள் மெதுவாக செல்ல சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஈச்சம்பாடி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved