Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் பராமரிப்பு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவிகளில், மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாதது ஏமாற்றத்தை அளித்தாலும், மாவட்டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை காரணமாக லேசான சாரல் மழையுடன் இதமான காற்றும் வீசி வருவது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved