Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுவண்ணன்சூர் புதிய பேரூராட்சி அலுவலகம் முன்பு பாபு அவரது மனைவி தீப ஆர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தாய் வீட்டிற்கு சொந்தமான 80 சென்ட் நிலம் தீப ஆர்த்தியிடம் இருந்ததாக கூறப்படுகிறது,
அந்த நிலத்தினை தீப ஆர்த்தி அண்ணன் காந்தகுமார் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்து கந்தகுமார் தீப ஆர்த்தி மீது மிளகாய் பொடி தூவி மறைத்து வைத்திருந்த அறிவால் சரமாரியாக வெட்டியுள்ளார் இதனை தடுக்க சென்ற கணவரும் பாபு கையையும் துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது, இதில் தீப ஆர்த்தி சம்பவ இடத்திலேயே உயிர் இருந்த நிலையில், காந்தகுமார் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவி இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அனுப்பி வைத்தனர், மேலும் தப்பிச்சென்ற காந்தகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் குடும்ப சொத்துக்காக தனது தங்கையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved