சென்னை மெட்ரோ ரயில், 2-ம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க, பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 657 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில், வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகள் கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. முதல் மெட்ரோ ரயில், 2026-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், அதைத் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்பட்டு, மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2029 ஏப்ரல் வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.