Also Watch
Read this
By: Manigandan Raja

அலைமோதிய பக்தர்கள் கூட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் மனநிறைவைத் தருவதாகவும், வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுவதாகவும், பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பச்சிளம் குழந்தை வைத்திருப்பவர் ஒருவர் மட்டும் அனுமதிப்பதாகவும் கூட உடன் வந்திருப்பவர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் புலம்பி பெண் பக்தர்களின் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அனைத்து வரிசைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பது பக்தர்கள் வேண்டுகோள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved