வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு : நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்களநாயகி சமேத கல்யாணநாதர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வலியுறுத்தி. பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்ய உள்ளே செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை இரண்டு டிஎஸ்பிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதி இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர். போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தனர் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. Related Link பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார் கொடுத்த வழக்கு