Also Watch
Read this
By: Manigandan Raja

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இன்று சனி என்பதால் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இன்று சனிக்கிழமை என்பதால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்கள நளதீர்த்த குளத்தில் புனித நீராடி அங்கு வீற்றிருக்கும் கலித்தீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அதிக அளவு வருகை தந்ததால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved