Also Watch
Read this
By: Manigandan Raja

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கிடப்பதாக கிடைத்த தகவலைடுத்து, அரியலூர் நகர காவல்துறையினர் மற்றும் இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஆகியோர் சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 30 முதல் 35 வரை மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரது உடல், தண்டவாளத்திற்கு அருகே தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் கிடந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தால், அவரது உடலில் நிச்சயம் துணி இருந்திருக்கும். தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது ரயில் மோதி விபத்து நடந்திருந்தால் கூட, விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள 500 மீட்டர் தொலைவில் ரத்தமோ அல்லது அவரது துணிகளோ கிழிந்த நிலையில் கிடந்திருக்கும்.

ஆனால் கைப்பற்றப்பட்டுள்ள இந்த பெண்ணின் உடலில் துணிகள் எதுவும் இல்லாதது, காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய இருப்புப் பாதை காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த பெண் யார்? அவர் எப்படி இங்கு வந்தார்? இது விபத்தால் நடந்த மரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற ரீதியில், அரியலூர் காவல் துறையினர் மற்றும் விருத்தாசலம் இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.