ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் நின்று நீராடிவிட்டு மூன்று மணி நேரம் காத்திருந்து ராமநாத சுவாமியையும் மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். மேலும் ராமேஸ்வரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை பக்தர்கள் வானங்களில் ஊர்ந்தபடியே செல்கின்றனர். மேலும் ராமர் பாதம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. Related Link 38 அடி கொடிமரத்தை 32 வகை மூலிகை எண்ணெயில் ஊற வைத்தனர்