Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மின் கம்பங்களில் அடிக்கடி தீ பற்றி எறிவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவரை வாடிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக ஏழு மின் கம்பங்களில் இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்டி பாக்ஸ் தரம் அற்றதாகவும், காலாவதியானதாகவும் இருப்பதாலேயே இது போன்ற சம்பவங்கள் தொடர்வதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் தீப்பற்றி எரிவதும், தீப்பொறிகள் சிதறுவதும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்களால் தொடர்வதால் அடிக்கடி மின் தடை செய்யப்பட்டு
அதனை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். மின்தடையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் தொடர்கிறது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலாவதியான பெட்டிகளை மின் கம்பங்களில் மாற்றி விட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.