news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

சிவகாசியில் இபிஎஸ்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

சிவகாசியில் இபிஎஸ்
சிவ​காசி பேருந்து நிலை​யம் அருகே விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள 7 தொகு​தி​களில் போட்​டி​யிடும் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை அறி​முகம் செய்து, பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி பிரச்​சா​ம் செய்​தார்.
அப்​போது இபிஎஸ் பேசி​ய​தாவது:
காவிரி - குண்​டாறு திட்​டம் மூலம் மேட்​டூர் அணை​யின் உபரி நீரை கால்​வாய் வழியாக, சிவகங்கை, புதுக்​கோட்டை, விருதுநகர் மாவட்​டத்​தில் வேளாண்மை வளர்ச்​சிக்கு உதவும் வகையில், இந்த ​திட்​டத்​திற்கு அதி​முக ஆட்​சி​யில் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டு, அடிக்​கல் நாட்டி வைத்​தேன். ஆனால், இந்த ​திட்​டத்தை திமுக திட்​ட​மிட்டு முடக்​கி ​வைத்​துள்​ளது. மீண்​டும் அதி​முக ஆட்​சி​யில் இந்த ​திட்​டம் நிறை​வேற்​றப்​படும். இதன்​மூலம் விருதுநகர் மாவட்​டம் பசுமை​யாக மாறும்.

சிறுமி முதல் மூதாட்டி வரை
இந்த ஆட்​சி​யில், சிறுமி முதல் மூதாட்டி வரை பாது​காப்​பு இல்​லை. இப்​படிப்​பட்ட ஆட்சி தொடர வேண்​டு​மா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடி​யாத பொம்மை முதல்​வர் தமி​ழ​கத்தை ஆள்​கி​றார். நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் டிஜிபி நியமிக்​க​வில்​லை. எங்கே பார்த்​தா​லும் கஞ்​சா, போதை மாத்​திரை, சாக்​லேட், திர​வம் என பல ரூபத்​தில் போதை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும்
போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாது​காப்​பில்​லை. போதை ஆசாமிகளால் கொ*, கொள்​ளை, பாலியல் சீண்​டல் நடக்​காத நாளே இல்​லை. டிஜிபி ஒரு​வர் கஞ்​சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என்று, ஓ போட்​டுக்​கொண்டே ஓய்​வு​பெற்​று​ விட்​டார்.

ஏனெனில் கஞ்சா விற்​பதே ஆளுங்​கட்​சிக்கு துணை நிற்​பவர்​கள் தான். அதி​முக ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும். ​டா​லின் மாடல் அரசு பெயி​லியர் மாடல் அரசு, பை, பை, ஸ்டா​லின்.

ரூ.5 லட்​சம் கோடி கடன்
நகராட்சி நிர்​வாக துறை​யில் நடந்த ஊழல் குறித்து அதி​முக ஆட்சி அமைந்​ததும் உரிய அமைச்​சர் மற்​றும் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். திமுக ஆட்​சி​யில் நிதி​யமைச்​ச​ராக இருந்த பி.டி.ஆர்.தியாக​ராஜன் பேசி​ய​தாக வெளி​யான ஆடியோ​வில், இரு ஆண்​டு​களில் ரூ.30 ஆயிரம் கோடி சம்​பா​தித்து உள்​ள​தாக பேசி​யது குறித்து, முதல்​வர் இது​வரை பதில் தர​வில்​லை.
இந்​தி​யா​வில் நம்​பர் ஒன் மாநிலம் தமி​ழ​கம் என்​கி​றார். ஊழல் செய்​வ​தில் இந்​தி​யா​வில் நம்​பர்-1 ஆட்சி. ஊழலுக்கு கலைக்​கப்​பட்ட அரசு திமுக அரசு. திமுகவை​யும், ஊழலை​யும் பிரிக்க முடி​யாது. கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்​டார்​.
இவ்​வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

Related Link

"அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல்"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

6
1 hr 30 mins agoshare
eps in sivakasibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved