பணம் பறிப்பு : சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடமாநில இளைஞர்கள் 3 பேரிடம் 90 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். வேலை தேடி கேரளாவிற்கு சென்ற மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த சகாருதீன், ஜஸ்முதீன், நஜ்மல் ஆகியோர், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த விசிட்டிங் கார்டில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டனர். அப்போது சங்ககிரிக்கு வரவழைத்து தனி அறைக்குள் அடைத்து வைத்து மிரட்டி, அவர்களிடம் இருந்து கும்பல் பணத்தை பறித்தது. இது தொடர்பாக சோமசுந்தரம், கவுசிக்குமார், இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Related Link கார் ஏற்றிக் கொ*ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது