Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்கண்ணு மனைவி கஸ்தூரி தேவியனந்தல் சாலையில் உள்ள டீக்கடை வைத்து நடத்தி வந்தார் இந்த டீக்கடையில் இன்று மாலை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக டீக்கடையில் மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்தது தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் முயற்சித்தனர் ஆனால் தீ வேகமாக பரவி தீ கொழுந்து விட்டு எறிந்தது இதனால் சாலையில் இருபுறமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதைப் பற்றி தகவல் அறிந்து வந்த திருநாவலூர் தீயணைப்புத்துறை தண்ணீரை பீச்சடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் புளியமரம் மற்றும் டீக்கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது கடையில இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி எரிந்தது தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மீது எரி மருந்து தெளிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved