Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை துரித உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப் படுவதாக குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியருக்கு புகார் வந்தது.
இதனை அடுத்து சங்கரன்கோவில் குடிமை பொருள் வழங்கல் (தனி) தாசில்தார் பாபு தலைமையில் வருவாய்த் துறையினர் ரயில்வே பீடர் சாலை, மற்றும் ராஜபாளையம் சாலை, திருவுடையான் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது சாலை ஓர துரித உணவகத்தில் வீட்டுக்கு பயன்படுத்தும் ஏரிவாயு சிலிண்டர்களை வைத்து உணவு பதார்த்தங்கள் தயார் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனை அடுத்து அந்த எரிவாயு சிலின்டர்களை பறிமுதல் செய்தனர் மேலும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved