Also Watch
Read this
Posted on: Feb 18, 2026 04:47 AM
By: Fyrose Banu

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம் கே எஸ் சேயற்கை நுண்ணறிவு பயிற்சி மையத்திற்கான இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். மேலும் அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் 3,560 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் அடிப்படை பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம். தற்போது மாதிரி பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி அளித்துள்ளது போல், அடுத்த கட்டமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.