கிணற்றுக்குள் விழுந்த வட மாநில இளைஞர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எலவந்தி பகுதியில் விவசாய காட்டுப் பகுதி ஒன்றில் உள்ள சுமார் 100 அடி கிணற்றில் வட மாநில வாலிபன் இருசக்கர வாகனத்தில் வாகனத்துடன் விழுந்து, மூன்று நாட்கள் தவித்து உயிருக்கு போராடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.வடமாநிலமான பீகார் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் வெள்ளிக்கிழமை இரவு எலவந்தி வடுகபாளையம் பகுதியை சொந்த ஊராகக் கொண்ட அர்ஜுனன் என்பவரது விவசாய தோட்டத்தில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்ததாகவும் தற்போது விசாரணையில் தெரிய வருகிறது.இந்நிலையில் இன்று காலை இதனை கண்ட இப்பகுதியைச் சேர்ந்த நபர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விரைந்து சென்று தியணைப்பு துறையினர் நீர் உணவின்றி தவித்து சிறுசிறு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ் என்ற நபரை தற்போது மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். Related Link பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்