Also Watch
Read this
By: Web Team

சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே 4வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுத்து பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில்,
தங்களுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள ஊழியர்கள், துப்புரவு பணியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும்,
பணி நிரந்தரம் செய்யக் கோரியும் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.