Also Watch
Read this
Posted on: Oct 07, 2025 07:16 AM
By: Web Team

அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெல் பயிர்கள், தொடர் மழையால் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை, சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி கிராமப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த சில நாட்களாக சோழவந்தான் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையால், அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் முற்றிலும் காற்றினால் சாய்ந்தது. இதனால், பெரிய அளவில் இழப்பீடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுபோன்ற மழைக்காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved