Also Watch
Read this
Posted on: Jun 25, 2025 04:04 AM
By: Web Team

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்கும் பணியை அதிகாரிகள் நிறுத்தியதற்கு எதிர்பபு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
நாட்டார்மங்கலத்தில் 15 ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பாக கொள்முதல் நிலையம் அமைத்து அரசு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு ஒப்பந்தம் செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved