Also Watch
Read this
By: Web Team

தருமபுரி அருகே இளம் பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றதாக, தனிப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
பாப்பாரப்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமிற்கும், வெண்ணாம்பட்டியை சேர்ந்த கோமதி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
இந்த இருவருக்கும் இடையிலான உறவில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, பரிகார பூஜை செய்வதாக கூறி, கோமதியை அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி கொல்ல ராஜாராம் முயன்றுள்ளார். அதில், உயிர் தப்பிய கோமதி, ராஜாராம் மீது போலீசில் புகாரளித்தார்.