நெல் மணிகள் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் சம்பா தாலடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரெங்கநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் குவியல் குவியலாக தேக்கமடைந்து காட்சியளிக்கிறது. விவசாயிகள் தங்களது நெல்லை கொட்டி வைத்து காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ரெங்கநாதபுரம் கொள்முதல் நிலையத்தில் குவியல் குவியிலாக தேங்கி கிடக்கும் நெல்மணிகளை உடனடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும். மேலும் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் எடையை அதிகமாக வைத்து கொள்முதல் செய்து வருவதாகவும், அதுபோன்ற இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து எடைகளை சரியான அளவு வைத்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு உண்டான பணியை துவங்க வேண்டும் எனவும். தாமதிக்கும் பட்சத்தில் தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் வேண்டுமென தெரிவித்தனர். Related Link விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திருட்டு