Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே புதுப்பட்டியில் கள்ளர் விடுதிகளை சமூக நீதி விடுதி என்று மாற்றியதற்கு கள்ளர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசாணை நகலை கிழித்தெறிந்து போராட்டம் நடத்தினர்.
சமூக நீதி விடுதி என மாற்றுவதன் மூலம் வரும் காலங்களில் கள்ளர் சமுதாயம் அழியும் நிலைவரும் எனக் கூறி அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தினர்.