Also Watch
Read this
Posted on: Oct 22, 2025 04:51 AM
By: Web Team

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 20 செமீ-க்கு அதிகமாக மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved