சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழு தலைவரை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலாண்மை குழு தலைவர் நதியா ராஜகோபால் தனது பணியை சரிவர கவனிக்காமல் இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.