திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பக்தர்கள் படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளுமாறும், நாளை வழக்கம்போல் ரோப்கார் சேவை மீண்டும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.