Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 01:18 PM
By: Web Team

உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சென்னை அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களை, தேசிய எஸ்சி/எஸ்டி ஆணைய இயக்குநர் ரவிவர்மன் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த ஜெனோவா, வசந்தி, பாரதி, கீதா ஆகியோர் கடந்த 17ஆம் தேதி முதல் கல்யாணபுரத்தில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை சந்தித்த எஸ்சி / எஸ்டி ஆணைய இயக்குநர் ரவிவர்மன், தூய்மைப் பணியாளர்களின் ஊதியம், இதற்குமுன் நடத்திய போராட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved