Also Watch
Read this
Posted on: Feb 05, 2025 12:47 PM
By: Srini Vasan

தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்து 2 ஆவது நாளாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கைவிட கோரியும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் வியாழன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த மாலை 6 மணியளவில் விடுவித்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி தூய்மை பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved