Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 10:36 AM
By: Manigandan Raja

வட கொரியா ஏவுகணை வீச்சு :
ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா பத்துக்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசியதாக தென்கொரிய ராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார். வட கொரியாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுனான் என்ற இடத்தில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் எந்த ரகத்தை சேர்ந்தவை, அவற்றின் ஆற்றல் என்ற போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஜப்பான் கடலில் தென்கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்தும் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியால் ஆத்திரமடைந்துள்ள வட கொரியா இந்த ஏவுகணைகளை வீசியதாக கூறப்படுகிறது.
வட கொரியா தங்களது கடற்பகுதியை நோக்கி ஏவுகணைகளை வீசியது என ஜப்பானின் கடலோர காவல் படையும் உறுதி செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved