Also Watch
Read this
By: Manigandan Raja

தீவிரமடையும் போர் :
வளைகுடா நாடுகளில் நாளுக்கு தீவிரமடைந்து வரும் போரை நிறுத்தும்படி, அமெரிக்காவிடம் உலகத் தலைவர்கள் எடுத்துக்கூற வேண்டும் என இந்தியாவிலுள்ள ஈரானுக்கான பிரதிநிதி மஜித் ஹகீம் இலாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போரை ஈரான் விரும்பவில்லை என்றும், பல முறை போரை தவிக்க முயன்றதாகவும் அவர் கூறினார். போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உலகளாவிய நெருக்கடி என்பதால், உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
அதே நேரம் எக்காரணத்தை கொண்டும் அமெரிக்காவிடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved