Also Watch
Read this
By: Manigandan Raja

ராமேஸ்வரம் நகராட்சி 7வது வார்டு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு, கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதோடு, பன்றிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : சாலையை ஆக்கிரமித்து தடுப்பு அமைத்த தனியார் பள்ளி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved