Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே எம் ஜி கலைக்கல்லூரி அரங்கத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் 27 ஆவது சப் ஜூனியர் 43 வது ஜூனியர் 53வது சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை,சென்னை மதுரை,சேலம், அரியலூர் திருநெல்வேலி, உள்ளிட்ட 26 மாவட்டங்களை சேர்ந்த 410 வீரர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் 290 ஆண் வீரர்களும் 120 பெண் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர் மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட சர்வதேச வலுதூக்கும் வீரர் ஜெய் மாருதி உள்ளிட்ட தேசிய அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.