Also Watch
Read this
Posted on: Nov 14, 2025 01:41 PM
By: Web Team

சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் வடிகால் பணி நடக்கும் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவால் அச்சமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர், பாலாஜி நகர் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும் வகையில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது மண் சரிந்ததுடன், வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved