Also Watch
Read this
By: Manigandan Raja

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் :
நெல்லை அருகே குடிபோதையில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஏற்படுத்திய கோர விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடி வந்த 10-ஆம் வகுப்பு மாணவி செல்வ பாலா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான மருத்துவக் காரணங்கள் குறித்து மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் மருத்துவ விளக்கம்: மாணவி செல்வ பாலாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "மாணவி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே மிகவும் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) இருந்தார்.
அவருக்கு தலையில் பலத்த காயம் (Severe Head Injury) ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, அவரது மூளைப் பகுதி முழுவதுமே ரத்தக் கசிவு (Brain Bleed) ஏற்பட்டிருந்தது. மருத்துவ ரீதியாக இதனை 'இன்ட்ராவென்ட்ரிகுலர் ஹெமரேஜ்' (Intraventricular Hemorrhage - IVH) என்று அழைப்போம். மூளையின் உட்புற அறைகளில் ரத்தம் கசிந்து நிறைந்திருந்ததால், அவரை மீட்கும் முயற்சி சவாலாக
இருந்தது," என்று தெரிவித்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
விபத்து நடந்த முதல் நாளில் இருந்தே மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போதிலும், கடந்த இரண்டு நாட்களாக ஒரு சிறிய முன்னேற்றம் (Improvement) தெரிந்தது.
ஆனால், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்ததால்,இன்று அதிகாலை மாணவியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved