Also Watch
Read this
Posted on: Dec 19, 2024 11:37 AM
By: Srini Vasan

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவனிடம் வாகனத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ- க்கு தொலைபேசி மூலம் அழைத்த மாவட்ட ஆட்சியர், மாணவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, தொப்பப்பட்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதைக் கண்டார்.
அப்போது வாகனத்தை தடுத்து நிறுத்தி மாணவரிடம் உரிமம் உள்ளதா என கேட்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved