கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை முழு கொள்ளளவான 165 அடியை எட்டியதையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், மதகுகளின் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நிலவும் ரம்மியமான சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம்..