Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பெக்கப்பதி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (25) இவர் மற்றும் இவரது அப்பா பாலன் மற்றும் தாய் பொன்னம்மாள் ஆகிய மூவரும் பழனிச்சாமியின் அண்ணன் கார்த்தி என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளனர்.
இன்று காலை காரமடையில் இருந்து தாயனூர் நோக்கி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது புங்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வந்த போது கட் ரோட்டில் இருந்து வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பழனிச்சாமி பலத்த காயமடைந்தார் மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது தந்தை பாலன் மற்றும் பொன்னம்மாள் ஆகியோர் காயம் அடைந்தனர் அக்கம் பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பழனிச்சாமி பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி வரும் வழியில் இறந்து விட்டதாகவும் அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved