Also Watch
Read this
Posted on: Jun 27, 2025 05:05 AM
By: Web Team

ஈரோட்டில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட அரியலூரை சேர்ந்த இளம்பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
வஉசி நகரை சேர்ந்த முருகன் - சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, இன்ஜினியரிங் படித்த நிலையில், குரூப் 2 தேர்வு பயிற்சிக்காக ஈரோட்டிற்கு சென்றபோது சாலையை கடந்த அவர் விபத்தில் சிக்கினார்.
தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த அவரது இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved