Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறையில் பாஜக உட்கட்சி பிரச்சனையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த இன்பராஜ் என்பவர் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பாஜக தலைவர்களை விமர்சித்து பதிவிட்டதாக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமைக்கு அனுப்பிய கடிதத்தின் பேரில் இன்பராஜ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது தொடார்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இன்பராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved