Also Watch
Read this
By: Manigandan Raja

ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபரீதம் :
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரைச் சேர்ந்த நர்மதா (21), சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தன் கணவர் திருவேங்கடத்துடன் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே அவர்கள் சென்றபோது, டாட்டா ஏஸ் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த நர்மதா, சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து நர்மதாவின் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளைத் தானம் செய்யக் குடும்பத்தினர் முன்வந்தனர். இதன் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. நர்மதாவின் உடல் அவரது சொந்த ஊரான கருகம்பத்தூரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved