Also Watch
Read this
Posted on: Nov 24, 2025 02:32 PM
By: Web Team

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் லாரிகளின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு நூதன முறையில் உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் திறந்த வெளியில் வெளியேற்றும் நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved