Also Watch
Read this
By: Web Team

சென்னை புழலில் மதுபோதையில் தகராறு செய்து விட்டு உறங்கச் சென்ற கணவர் மீது, நள்ளிரவில் எண்ணெயை கொதிக்க வைத்து ஊற்றிய மனைவியை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே 2 முறை திருமணமாகி மனைவியரை பிரிந்த காதர் பாஷா, கணவரை இழந்த நிலோபர் நிஷா என்பவரை 17 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
அவ்வப்போது குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்த காதர், கடந்த 9ஆம் தேதி இரவும் தகராறில் ஈடுபட்டு மனைவியை அடித்து விட்டு உறங்க சென்றார். ஆத்திரமடைந்த மனைவி நள்ளிரவில் எண்ணெயை கொதிக்க வைத்து கணவர் மீது ஊற்றியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved