Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது, இந்த அரசு மதுபான கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாலும் பள்ளி மாணவ மாணவிகள் அவ்வழியாக சென்று வர முடியாமல் அவதிப்படுவதாகவும் குடிமகன்களால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக
கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட வந்ததால் அவர்களைத் தடுத்து போலீசார் கண்டிப்பாக கடையை திறக்க விடமாட்டோம் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்,
எங்கள் கண்முன்னே கடையை சீல் வைத்தால்தான் இடத்தை விட்டு செல்வோம் என அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த கடுகை கட்டையால் அடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் 30 நாள் அவகாசம் கேட்ட நிலையில் அதற்குள் கடையை அகற்றுவதற்கு பெண்கள் டாஸ்மார்க் கடைக்கு வருகை தந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, கடையை சீல் வைத்து மூடும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாற்றம் என்று அவர்கள் தொடர்ந்து கடை முன் நின்று கோரிக்கையை முன்வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,