Also Watch
Read this
By: Manigandan Raja

மரங்கள் முறிவுற்றது விழுந்துள்ளது :
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள் மற்றும் புற நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து, உடல்நலிவுற்றவர்கள் பலரும் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வாட்டிற்கு படுத்தவாறு செல்ல ஸ்ட்ரக்ச்சர்கள் தட்டுப்பாடு நிலவி வந்தது.இந்த தனியார்
அமைப்பின் மூலமாக நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஸ்ட்ரக்ச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொடுக்கப்பட்ட ஸ்ட்ரக்ச்சரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை காற்றுடன் கூடிய மழையினால் மருத்துவமனையில் மரங்கள் முறிவுற்றது விழுந்துள்ளது.அவ்வாறு முடிவுற்று விழுந்த 100கிலோவிற்கு மிகாமல் இருக்கும் மரங்களை அகற்ற நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஸ்ட்ரக்ச்சர்களை பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நமது நியூஸ் தமிழ் செய்தி குழு செய்தி சேகரித்து கொண்டிருந்த போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் இது குறித்து கேட்ட அவர்களிடமே துப்புரவு ஒப்பந்த மேலாளர் மிரட்டும் தோணியில் பேசியதோடு செய்தி சேகரித்து கொண்டு நமது செய்தியாளரை யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என அதிகார கேட்டு தோணியில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகளை அழைத்துச் செல்ல தனியார் அமைப்புகள் நல்லெண்ண அடிப்படையில் மருத்துவமனைக்கு உபகரங்களை வாங்கி கொடுப்பதை சரியான முறையில் பயன்படுத்தாதது குப்பைகள் அகற்ற,மரங்களை அகற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது அதிர்ச்சியளிப்பதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved