Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றத்தில் பழக்கடை உரிமையாளரின் 46 லட்சம் ரூபாய் பணத்தை ஊழியர் கொண்டு சென்றபோது, பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் பழக்கடை வைத்துள்ள சாந்தகுமார் என்பவருக்கு கொத்தவால் சாவடியை சேர்ந்த வசீம் என்பவர் 46 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டியுள்ளது. அப்பணத்தை வாங்கி வந்து கொண்டிருந்த கடை ஊழியர் நாராயணன் இடமிருந்து இளைஞர்கள் வழிபறி செய்ததாக சொல்லப்படுகிறது.
அப்பணம் உண்மையில் வழிப்பறி செய்யப்பட்டதா? இல்லை மோசடி செய்யப்பட்டதா? என்பதை குறித்து நாராயணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.